Sunday 16 August, 2009

ஜென் என்றால் என்ன???


ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.

கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.

இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது.
ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.



ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.

ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும்.
அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .

மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....

இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.

அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.

இது தான் யோகா என்பது
எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை கீழே போடுங்கள்.

16 comments:

ஆ.ஞானசேகரன் said...

சரியான விளக்கம் பாராட்டுகள் சக்தி

நட்புடன் ஜமால் said...

இது வரை எனக்கு தெரியாதுங்க இந்த விளக்கம்.

நன்றி சகோதரி.

S.A. நவாஸுதீன் said...

நல்ல தெளிவான விளக்கம் சக்தி. நன்றியுடன் பாராட்டுகள்.

அதோட சீயான்(விக்ரம்) விளக்கம் இப்பதான் தெரியுது.

பாலா said...

mudiyala

SUFFIX said...

கோபம், பொறாமை போன்ற‌ கசடுகளே மனதிற்க்கு‌ சுமை!! இச்சுமையை இறக்கி வைத்தால் வாழ்வில் அமைதி தான். நல்லா சொல்லி இருக்கீங்க சக்தி.

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு சக்தி.இன்னும் ஒட்டு போட தெரியலை எனக்கு(நாலு கழுதை வயசாச்சு.வெளியில் சொல்லாதீர்கள்.)//ஜென் என்பது வேதங்கள் இல்லாத விதி முறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை.அது வரையறுக்கப்படாத ஒரு பாதை// ..நான் சிலாகிப்பது எல்லாமே பின்னூட்டம் வழியாக நேர்கிறது.நறுக்கு தெறித்தார் போல் இருக்கு உங்கள் பதிவுகள் எதுவும்.வாழ்த்துக்கள் சக்தி!

கவிக்கிழவன் said...

தெளிவான விளக்கம் சொல்லிய சக்திக்கு நல்ல பாராட்டுகள் .வாழ்த்துக்கள் சக்தி

Anonymous said...

இது வரை எனக்கு தெரியாதுங்க இந்த விளக்கம்.

நன்றி சகோதரி.

Admin said...

உங்கள் விளக்கங்கள் அருமை...

Anonymous said...

தெரியாதை சொன்னதற்கு நன்றி..

அனுபவம் said...

நல்ல விளக்கம்!

அண்ணாமலையான் said...

உபயோகமான எளிமையான விளக்கம்.. நன்றி.....

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan said...

மிக அருமை சக்தி..மனதில் இருந்தும் சுமையைப் போட்டு விட்டேன்.. லேசானது போல் இருக்கிறது..

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க... இதுவரை இந்த விளக்கம் நான் அறிந்ததில்லை. மொத்த விளக்கமும் இவ்வளவுதானா? அல்லது இன்னும் விளக்கமுடியுமா? அப்படியாயின் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

யோகா பற்றின கடைசி பத்தி எளிமையாக மனதில் பதியும் விதம் உள்ளது.

அண்ணாமலை..!! said...

நல்ல தகவல்கள்..
நல்ல விளக்கங்களுடன்!