Thursday 19 August, 2010

திரெட்மில் வாங்கப்போகின்றீர்களா

Stock Image - man on treadmill  smiling at man  and woman running  on treadmills  in gym. fotosearch  - search stock  photos, pictures,  images, and photo  clipart

திரெட்மில் வாங்கப்போகின்றீர்களா.சில விஷயங்களை கவனியுங்கள்

ஏனென்றால் நிறைய பேர் வீட்டில் உடற்பயிற்சி கருவிகளை வாங்கி

சும்மா மூலையில் போட்டு வைத்துஇருக்கின்றார்கள்.

நீங்கள் மலிவான விலையில் வாங்க முயலாதீர்கள் குறைந்தபட்சம் 50000

அளவில் வாங்குவது உசிதம்

Propel Precor போன்ற கம்பெனி திரெட்மில் வாங்குங்கள் ஏனென்றால் நடக்கும்

பெல்ட்டின் அகலம் அதில் சற்றுஅதிகம்.

மலிவான விலை திரெட்மில்லில் நடக்கும் பெல்ட் மிக குறுகலாய் இருக்கும்

சில நிமிடங்களில் அது உங்களுக்கு களைப்பை தரக்கூடும்.

உடற்பயிற்சி கருவிகளை வாங்குவதற்கு முன் அதை எப்படி உபயோகிப்பது

என கற்றுக்கொள்ளுங்கள்.

எடுத்தவுடன் இது போன்ற சாதனங்களில் கண்டிப்பாக அதிவேகமாக ஓடுதல் கூடாது.

முதல் 5 நிமிடங்கள் மெதுவாக நடங்கள். அதற்கு பிறகு கண்டிப்பாக ஸ்டிரெட்ச்

செய்யவேண்டும்.பின்பு மெதுவாக நடக்க ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை

அதிகப்படுத்துங்கள்.ஜாகிங் நல்ல பயனைத்தரக்கூடும்.20 நிமிடங்களுக்கு

பின் படிப்படியாக வேகத்தை குறைத்து மெதுவாக நடந்து கூல் டவுன் செய்வது

நலம்.

திரெட்மில்லில் சரியான முறையில் நடக்காவிட்டால் கண்டிப்பாக

முதுகுவலியை தரும் எனவே

Core Exercise

Abdominal Exercise

போன்றவற்றை இவற்றோடு சேர்ந்து செய்வது மிகவும் நல்லது. இவற்றால்

அழகான வடிவமைப்பு பெறலாம்.

கண்டிப்பாக தேவையற்ற ஊளைசதைகளை குறைத்துவிடும் .

முயன்று பாருங்கள்

எந்த நோயும் வந்தபின் உடல் நலம் காப்பதை விட

வரும் முன் காப்பது சாலச்சிறந்தது

Sunday 16 August, 2009

ஜென் என்றால் என்ன???


ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.

கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.

இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது.
ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.



ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.

ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும்.
அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .

மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....

இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.

அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.

இது தான் யோகா என்பது
எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை கீழே போடுங்கள்.

Tuesday 11 August, 2009

காதல் குறள்!!!!


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்

நான் அவளை பார்க்கும்போது, நாணி தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள். நான் அவளை பார்க்காத சமயத்தில், என்னை பார்த்து மெல்ல புன்முறுவல் செய்வாள்......

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைகொண் டன்னது உடைத்து

நான் பார்தேன் அவளும் எதிர் நோக்கினாள்.அந்த பார்வை தானே துன்புறுத்தவல்ல மோகினி, ஒரு சேனையும் உடன் அழைத்து கொண்டு வந்து தாக்கியதை போலிருந்தது ......

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

காதலர் இருவருள் ஊடலில் தோற்றுப்போனவர் தான் வென்றார். அது அப்போது அறியப்படாது போனாலும் பின்னர் சேரும்போது தெரியும்.....

ஒரு தலையின் இன்னாது காமம்காய் போல
இருதலை யானும் இனிது

தலைவன் தலைவி இருவருள் ஒருவரின் அன்பினால் மட்டுமே உண்டாகிய காதல் துன்பமயமானது. காவடியின் பாரம் போல் இருபக்கமும் ஒத்த அன்பினால் உண்டாகிய காதலே இனிமையானது......

நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டால்
அஞ்சுதம் வேபாக்கு அறிந்து

என் காதலர் எப்போதும் என் நெஞ்சில் நீங்காது உறைவதால் அவர் மேனி வெந்து விடுமோ என்று சூடானவற்றை சாப்பிடக்கூட அஞ்சுகிறேன்.....

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறை இறவா நின்ற வளை

தலைவனுடைய பிரிவினால் ஏற்பட்ட மெலிவால் என்முன் கையில் இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்து விடுவதால், அவர் என்னை பிரிந்த்தை பலரும் அறிந்து என்னை தூற்றாமல் இருப்பார்களோ????

தம்நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்

தன் நெஞ்சம் என்னை வரவிடாமல் தடுத்து காவல் இருக்கும் அவர் என் நெஞ்சத்தில் மட்டும் ஒழியாமல் வருவதற்கு வெட்கப்படமாட்டாரோ???

இம்மை பிறப்பில் பிரியலாம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்

இப்பிறப்பில் உன்னை பிரியமாட்டேன் என்று சொன்னபோது, அப்படியானால் இனிவரும் பிறவியில் மறந்து விடுவேனோ என்று தவறாக உணர்ந்து, மறுமை பிரிவுக்கு அஞ்சிக் கண்களில் நீர்வடிய நீர் நிறைத்து நின்றாள்......

Thursday 6 August, 2009

பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்


”பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
என்று வீர முழக்கமிடுகிறார் பாரதி

பயம் சில குடும்பங்களில் தாய் தரும் நோய் என்று சில மன நூலார் கூறுகின்றனர்.

இருட்டில் போகாதே அதைச்செய்யாதே இதைத் தொடாதே என எதற்கெடுத்தாலும் பயந்து தன் குழந்தைக்கு பாலுடன் பயத்தையும் ஊட்டுகிறாள் என்கிறார்கள்.

பணிந்துபோவது நல்லது தான்.
ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.
இப்பொழுது நாம்
அதிகாரத்தை கண்டு அஞ்சுகிறோம்,
ஆணவத்திற்கு தலை பணிகிறோம்.
மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் தயங்குகின்றனர் படித்தவர்கள். பயம் பல நிலைகளில் மக்களிடம் காணப்படுகின்றது.


நமது பணிவு என்ற பண்பு, மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய்,பேடியாய் மாற்றிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது.பாரதியும் அதை தான் கூறினார். நம்மிடை நைச்சிய மனோபாவம் மிகுந்திருப்பதாக, அடிமைப் புத்தி மலிந்திருப்பதாக.

தன்னம்பிக்கை இழந்து விட்ட ஒரு சமுதாயத்தை, தன்னை தாழ்த்திக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை ,பிறரை இரந்து வாழும் ஒரு மன நிலையை கொண்ட ஒரு மக்கள் சமூகததை நாம் இன்று கொண்டு உள்ளோம்.இந்த நிலை மாற வேண்டும்.

நம்மால் முடியமா??? என்ற சந்தேகம்
நம்மால் முடியாது என்ற
நம்பிக்கையாய் ஊறி
நமது தாழ்வு மனப்பான்மையாய் வெளிவருகின்றது.
நமக்கேற்படும் பயத்தினால்,
நாம் பிறரை சார்ந்து நிற்க விரும்புகின்றோம்.
பிறரிடம் நமது பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலம்
நமது பிரச்னைகளிலிருந்து அவற்றை சமாளிப்பதிலிருந்து தப்பிக்க பார்க்கின்றோம்


கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.

Monday 3 August, 2009

தேடல்.....


சங்கரன் பிள்ளை ஒரு முறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப்பாதையில் போக விரும்பினார்.

அந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற முறையாக ,கோரக்நாத் முறையிருந்தது.எனவே கோரக்நாத் முறையை சேர்ந்தவர்களிடம் சென்று
சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள்.

பொதுவாகவே கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் கண்ணாடி அல்லது தந்தத்தால் ஆன ஒரு வளையலை அணிந்திருப்பார்கள்.எனவே சங்கரன் பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு,வளையலை மாட்டி மொட்டையடித்து,காவி நிற ஆடையை அணிவித்தார்கள்.அங்கே ஒரு மாதமிருந்தார்.அவருக்கு மன நிறைவு கிடைக்கவில்லை.எனவே மறு படியும் தேடுதலை தொடங்கினார்.

அவர் மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியை சந்தித்தார்.தீட்சை கேட்டார்.அவர் காவியை கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத்தந்து அணியச்சொல்லி அவர்கள் மதவழக்கப்படி அறுவைசிகிச்சை செய்ய சொன்னார்.அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை . ஏனென்றால் அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள் .

அந்த துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார்.தலைமுடி மட்டுமல்ல,தாடியும் வளரவேண்டும் என்று சொன்னார் எனவே சங்கரன் பிள்ளை அதை வளர்க்க துவங்கினார்.அங்கே ஒரு மாதம் இருந்தார்.அவருக்கு மன நிறைவு வரவில்லை.

அதையும் விட்டு விட்டு கன்பத் என்கிற துறவு முறைக்கு சென்றார்.மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை .கோரக் நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதில் ஒரு வளையலை அணிவது போல கன்பத் இனத்தை சேர்ந்தவர்கள் இடது காதில் அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டி விட்டார்கள்.

இப்படியே தொடர்கின்றது .உங்களுக்கு புரியும் . இது எங்கே போகும் என்று ???

ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்திருந்தால் இது அவனுக்கு நடந்திருக்காது .அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்......

நாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......
என்ன தேடுகின்றோம் என நாமே அறியாது .....

Sunday 2 August, 2009

மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!


A Royal Salute To The Great Scientist Mayilswamy Annadurai..........

கோவை அருகில் அமைந்துள்ள
கோதவாடி எனும் கிராமத்தை சேர்ந்தவரும்,
எங்கள் உறவினரும்,
சந்திராயன் விண்கலத்தின் திட்ட குழு தலைவருமான

திரு.மயில்சாமி அண்ணாதுரை
(chandrayan project director) அவர்களுக்கு

டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்த
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள்.....





கடந்த சனிக்கழமை அன்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பர்னாலா அவர்களால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் வலையுலகத்தின் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்!!!!

Monday 20 April, 2009

தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???




மனித வர்கத்தின் மாபெரும் பேரழிவு
மகிந்தாவின் தலைமையில்
மகிழ்ச்சியோ பலருக்கு

காந்தி தேசமே இவர்களுக்கு
காவல்காரனாய்

வன்னியில் வாழ்வினை இழந்தோர்
வாழ்கையே தீயில் இழந்தோர் இவர்களை
வாயை மூடிக்கொண்டு பார்க்கும்
வக்கற்றோர் நாங்கள்

வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் இங்கு எங்கள்
வேதனை தீர்க்குமா
வேதங்கள் நான்கு

தமிழனாய் பிறந்ததுக்கு
தலை இன்றி பலர்
தமிழச்சியின் வயிற்றில்
சூல்கொண்டதால் சிதைக்கப்படும்
எங்கள் கண்மணிகள் சிலர்

போரை நிறுத்துங்கள்
போரை நிறுத்துங்கள்
ஜனிக்கட்டும் தமிழீழ குருத்துக்கள்
ஒட்டாய் அழித்துகொள்ளலாம்

வெற்றி முழக்கமிடும் சிங்களவம் அங்கே
வெறி கிளம்புது எங்களிடம் இங்கே
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???