Wednesday 31 December, 2008

புதிதாக வருடம் பிறந்துவிட்டது
ஆனால் என்று எங்கள் ஈழத்தில்
புது விடியல் பிறக்கும்
எங்கள் உடன் பிறப்புகள்
என்று இனிய புது விடியல்
காண்பார்கள்.
என்று அரசியல்வாதிகள் எங்கள் மக்களின்
உரிமைக்காக மட்டும்
உண்மையாக போராடுவார்கள்.
சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்
தோற்றால் கூட் வருந்தும்
மக்களே
அங்கு தோற்பது
எதிர்பார்ப்புகள் மட்டும் அல்ல
உயிர்கள். நமது சகோதர சகோதரிகள்
உயிர்கள்
அவர்களும் பாத்து மாதம் சுமந்து தானே பெற்றார்கள்
அங்கு பிறக்கும் உயிர்களுக்கு
மட்டும் மதீபபுஇல்லையா
என்று பிறக்கும் அங்கு ஒரு புதிய விடியல்
அன்றே தமிழர்க்கு
புது வருடம்
புது வருடம் மட்டும் அல்ல புதிய சகாப்தம்
காத்திருப்போம் இதவும் கடக்கும்
இனிமை பிறக்கும்
அவர்கள் வாழ்வில் ஒளிபிறக்கும் இந்த புது வருடத்தில்
என்ற நம்பிகையோடு