Monday 20 April, 2009

தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???




மனித வர்கத்தின் மாபெரும் பேரழிவு
மகிந்தாவின் தலைமையில்
மகிழ்ச்சியோ பலருக்கு

காந்தி தேசமே இவர்களுக்கு
காவல்காரனாய்

வன்னியில் வாழ்வினை இழந்தோர்
வாழ்கையே தீயில் இழந்தோர் இவர்களை
வாயை மூடிக்கொண்டு பார்க்கும்
வக்கற்றோர் நாங்கள்

வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் இங்கு எங்கள்
வேதனை தீர்க்குமா
வேதங்கள் நான்கு

தமிழனாய் பிறந்ததுக்கு
தலை இன்றி பலர்
தமிழச்சியின் வயிற்றில்
சூல்கொண்டதால் சிதைக்கப்படும்
எங்கள் கண்மணிகள் சிலர்

போரை நிறுத்துங்கள்
போரை நிறுத்துங்கள்
ஜனிக்கட்டும் தமிழீழ குருத்துக்கள்
ஒட்டாய் அழித்துகொள்ளலாம்

வெற்றி முழக்கமிடும் சிங்களவம் அங்கே
வெறி கிளம்புது எங்களிடம் இங்கே
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???