Tuesday 10 March, 2009

யுத்த பூமி

பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு

புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது

இது யுத்த பூமி எங்கேடா சாமி????

7 comments:

ராம்.CM said...

இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது//



அருமையான‌ வ‌ரிக‌ள்! என்றுதான் விடியுமோ?...

பாலா said...

valiyai pathivum seiyum thangal kavithai

nandru endru sonnala nadrai irathu

bala

பாலா said...

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு

unmaiyavey valikkuthu

பாலா said...

புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது

inthai oli ketkumaa angey ?!!!!

sakthi said...

தங்கள் வருகைக்கு
நன்றி ராம்
நன்றி பாலா

kavitha said...

Arumaiyana Varigal

sakthi said...

thanks rose