Showing posts with label ஈஷா கதைகள். Show all posts
Showing posts with label ஈஷா கதைகள். Show all posts

Monday, 3 August 2009

தேடல்.....


சங்கரன் பிள்ளை ஒரு முறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப்பாதையில் போக விரும்பினார்.

அந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற முறையாக ,கோரக்நாத் முறையிருந்தது.எனவே கோரக்நாத் முறையை சேர்ந்தவர்களிடம் சென்று
சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள்.

பொதுவாகவே கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் கண்ணாடி அல்லது தந்தத்தால் ஆன ஒரு வளையலை அணிந்திருப்பார்கள்.எனவே சங்கரன் பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு,வளையலை மாட்டி மொட்டையடித்து,காவி நிற ஆடையை அணிவித்தார்கள்.அங்கே ஒரு மாதமிருந்தார்.அவருக்கு மன நிறைவு கிடைக்கவில்லை.எனவே மறு படியும் தேடுதலை தொடங்கினார்.

அவர் மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியை சந்தித்தார்.தீட்சை கேட்டார்.அவர் காவியை கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத்தந்து அணியச்சொல்லி அவர்கள் மதவழக்கப்படி அறுவைசிகிச்சை செய்ய சொன்னார்.அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை . ஏனென்றால் அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள் .

அந்த துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார்.தலைமுடி மட்டுமல்ல,தாடியும் வளரவேண்டும் என்று சொன்னார் எனவே சங்கரன் பிள்ளை அதை வளர்க்க துவங்கினார்.அங்கே ஒரு மாதம் இருந்தார்.அவருக்கு மன நிறைவு வரவில்லை.

அதையும் விட்டு விட்டு கன்பத் என்கிற துறவு முறைக்கு சென்றார்.மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை .கோரக் நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதில் ஒரு வளையலை அணிவது போல கன்பத் இனத்தை சேர்ந்தவர்கள் இடது காதில் அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டி விட்டார்கள்.

இப்படியே தொடர்கின்றது .உங்களுக்கு புரியும் . இது எங்கே போகும் என்று ???

ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்திருந்தால் இது அவனுக்கு நடந்திருக்காது .அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்......

நாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......
என்ன தேடுகின்றோம் என நாமே அறியாது .....